தினம் கீரை விற்கும்
அந்தக் கிழவருக்கு
என்ன தெரியும்?
செத்துக் கொண்டிருக்கும்
வயலையும்
ஒட்டிக் கொண்டிருக்கும்
வறுமையையும் தவிர,
ஓடிப் போன
மகளை நினைத்தால்,
கிழவருக்கும் சந்தோசம்
காட்டு வேலையில்
உட்கார்ந்து, எப்படிதான்
கரையேற்ற முடியும் ?
காலண்டரிலிருந்த
கடவுளின் கண்களைக் கூட
கரப்பான் பூச்சிகள்
களவாடிச் சென்றுவிட்டன...
ஆனாலும் கிழவர்
பொறுப்பாக என்றுமே
பூப் போட மறந்ததில்லை...
கடவுளுக்குதான் கண்ணில்லையே.
- மு.முகமது பாட்சா*
08/04/2017
-
அந்தக் கிழவருக்கு
என்ன தெரியும்?
செத்துக் கொண்டிருக்கும்
வயலையும்
ஒட்டிக் கொண்டிருக்கும்
வறுமையையும் தவிர,
ஓடிப் போன
மகளை நினைத்தால்,
கிழவருக்கும் சந்தோசம்
காட்டு வேலையில்
உட்கார்ந்து, எப்படிதான்
கரையேற்ற முடியும் ?
காலண்டரிலிருந்த
கடவுளின் கண்களைக் கூட
கரப்பான் பூச்சிகள்
களவாடிச் சென்றுவிட்டன...
ஆனாலும் கிழவர்
பொறுப்பாக என்றுமே
பூப் போட மறந்ததில்லை...
கடவுளுக்குதான் கண்ணில்லையே.
- மு.முகமது பாட்சா*
08/04/2017
-
No comments:
Post a Comment