நிலா
வாட்டத்தில் நடக்கிறாள்
வற்றிய நதி!
சிரிக்காதே
சிதறுகிறது வெள்ளிப் பூக்கள்
வானத்தில் என் நிலா!
நிலா கவிதைகளை
எழுதிக் கொண்டிருக்கிறேன்
அருகினில் நிலா !
பகலில் பதுங்கியவள்
இரவில் எட்டிபார்க்கிறாள்
வா நிலா !
இரவை
துடைக்கிறது
நிலா!
- மு.முகமது பாட்சா*
12/03/2018
No comments:
Post a Comment