
இலக்கியத் திரட்டு (2)
முட்டிப் பார்க்கிறேன்
முடியவில்லை...
என்னை நானே
தட்டிப் பார்க்கிறேன்
தகரவில்லை....
காமத்தின்
உச்சக் கூட்டினால்
உளறிப் பார்க்கிறேன்
உதவவில்லை...
பாழும் என்
காதல் நோய் அறியாமல்
காமம் கூட்டும்
காற்றுக்கும்
தூங்கும் பாழ் ஊருக்கும்!
,
மு.முகமது பாட்சா*
.
இலக்கியம்.
முட்டுவென் கொல்? தாக்குவென் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ அ அல் எனக் கூவு வேன் கொல்
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவு நோய் அறியாது, துஞ்சும் உயிர்க்கே
(குறுந்தொகை : 28 - ஒளவையார்)
No comments:
Post a Comment