
பதிப்பகத்தின் வாசலில்
நின்று கொண்டிருக்கிறது எழுத்துகள்
வந்தவர்களும் போனவர்களும்
புன்னகையை போட்டுவிட்டுப் போனார்கள்
'ஆடி' மகிழுந்து அசைந்து நிற்க
காக்கிச் சட்டையொன்று
மூக்குக் கண்ணாடிக்கு கதவைத் திறந்துவிட்டது
எழுத்துகளை எட்டிப்பார்த்த கண்ணாடி
சட்டையேன் போடவில்லை என்றது
வேட்டிக் கட்டியிருப்பதை உறுதி செய்தன
எழுத்துகளின் கைகள்...
கதையெதுவும் சரியில்லையே - இது கண்ணாடி
வாசலில் நின்ற வெட்கத்திற்காக
கவிதைகள்
தலைகுனிந்து வெளியேறும் போது
வாசலில் பதிப்பகத்தின் பெயர்
அச்சுப் பிழையாகவே இருந்தது
- மு.முகமது பாட்சா*
03 /03 /2018
No comments:
Post a Comment