
யார் கவிஞன்?
காசுக்குப் பாடுபவன் கவிஞன் அல்லன்
கைம்மாறு விழைந்து புகழ் பெறுதல் வேண்டி
மாசற்ற கொள்கைக்கு மாறாய் நெஞ்சை
மறைத்துவிட்டுப் பாடுபவன் கவிஞன் அல்லன்
தேசத்தைத் தன்னினத்தைத் தாழ்த்திவிட்டுத்
தேட்டையிடம் பாடுபவன் கவிஞன் அல்லன்
மீசைக்கும் கூழுக்கும் ஆசைப்பட்டு
மேல்விழுந்து பாடுபவன் கவிஞன் அல்லன்
ஆட்சிக்கும் அஞ்சாமல், யாவரேனும்
ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபவன் கவிஞன் ஆவான்
மேலோங்கு கொடுமைகளைக் காணும்போது
காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவான்
தாழ்ச்சிசொல்லும் அடிமையலன் மக்கட்கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்
கவிஞர் முடியரசன்
No comments:
Post a Comment