
இல்லையென்ற சொல்லுக்குள்தான்
எல்லாமிருப்பதாகச் சொல்கிறார்
அந்த சூஃபி !
இருப்பதென்பதெல்லாம்
இல்லையென்றே ஆகிவிடுமாம் !
பிறப்பில் இருப்பது
இறப்பில் இல்லாமல் போகிறது !
விதைத்த ஆசைகள்
குவிக்கின்றன பொருள்களை,
இறப்பிற்குப் பின்
திருப்பி எடுப்பதேயில்லை ,
தடித்த வார்த்தைகள் இருக்கின்றன,
வெறுத்த உறவுகள் இல்லாமல் போகும் ,
இல்லையென்ற சொல்லுக்குள்தான்
இறைவன் இருக்கிறானாம்,
இருப்பதென்பதெல்லாம்
இல்லையென்றே
சொல்லிவிட்டுப் போகிறார்
அந்த சூஃபி !
- மு.முகமதுபாட்சா
No comments:
Post a Comment