
முதுமையென்பது
வலி கிடையாது,
தொலைத்த உறவுகளை
தேடுகின்ற பயணம் !
சுருக்கங்களை
அனுபவங்களென்று
நீங்கள் சொல்லிக் கொள்ளலாம்,
கவலைகளின் ரேகைகள் !
பார்வைக் குறைவும்
குற்றமில்லை,
தேவையில்லாத காட்சிகளை
தவிர்த்துக் கொள்ளலாம் !
முதுமைக்கென்று
கனவுகள் கிடையாது,
ஏக்கங்களை மட்டுமே
ஏந்திக் கொண்டு நிற்கும் !
மரணத்தைக் கண்டும்
பயம் கிடையாது,
மடியில்
வைத்துக் கொண்டே திரியும் !
முதியோர் இல்லங்களின்
கட்டில்களில் படுத்திருப்பது
இயலாமை மட்டும் தான்,
முதுமை கிடையாது !
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment