
' நவீனம் எழுதத் தாளை எடுத்தேன் '
எழுதுவது நவீனம்தான் என்றால்
'நவீனம்' தேவையில்லை என்றார்கள்,
' எழுதத் தாளை எடுத்தேன் '
எழுதுவதற்குத்தான் தாள்
தாளும் வேண்டாமென்று சொல்ல
' தாளை எடுத்தேன் '
எடுத்தேன் நெருடுவதால்
எடுத்தேனையும் எடுத்தேன்
மிச்சமாய் நின்றது
' தாள் '
இதையும் எடுத்துவிட்டால்
மௌனத்தைச் சொன்ன
மிகச் சிறந்த நவீனம்
இதுவாகத்தான் இருக்கும்
- மு. முகமது பாட்சா*
No comments:
Post a Comment