
பட்டா போட்ட நிலத்தில்தான்
கொட்டை போட்டு
விவசாயம் செய்கிறான்
கால் வயிற்றுக் கஞ்சிக்காரன் !
பன்னாட்டுப் பன்னாடையின்
பத்து லட்ச ரூபாய் ஆசைக்கும்
பணியவில்லை ,
அப்ரூவல் சரியில்லையென்று
தாசில்தார் முத்திரை குத்துகிறார் !
கரம்பு நிலங்களில்
விவசாயம் செய்யக் கூடாதாம்,
கிராமத்து அதிகாரி
சட்டம் இயற்றுகிறார் !
ஆட்சியர் அலுவலகம்
அவனை அலைக் கழிக்கிறது,
கால்வயிறும்
காணாமல் போனதால்
முழம் கயிறு போதுமென்று
முடிவெடுத்தான் !
அரசாங்கம்
கொடுப்பதாகச் சொன்ன
இரண்டு லட்சத்திற்கு
அலைகிறாள் அவன் மனைவி !
அந்த நிலத்திற்கான
இப்போதைய மதிப்பு ,
இரண்டு லட்சம்தானாம் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment