
என்னைப் பார்த்து பதுங்கி நிற்கும்
அந்தப் பூனைக் குட்டியின் பெயர்
மியாஸாக இருக்கலாம் !
அதன் உலகத்தில்
அன்னமிடும் என் மனைவி,
அன்னையாகவும்,
மிரட்டி, விரட்டும் நான்
வில்லனாகவும் இருக்கலாம் !
மிரண்டு நிற்கும் அதன் பார்வையில்
என் மனம்
ஏதோ ஒன்றைக் கசிந்து நிற்கிறது,
அதன் பெயர்
கருணையாக மட்டுமே இருக்க முடியும் !
-மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment