கொடுத்துவிட்டுப் போன
பூங்கொத்திலிருந்து
நாகமொன்று வெளிவந்தது !

"பூங்கொத்தை வீசி விடு
என்னைவிட
அதுதான் விஷமானது" என்று
நாகம்
சொல்லிவிட்டு நகர்கிறது !
***

இசைக்கும்
உன் விரல்களுக்குத் தெரியாது
இசைப்பது
என் பெயரென்று!
***

பறவைகள்
திரும்பி விட்டன...
கூடுகளைக் காணவில்லை!
***

இருளை
ஓட்டத் தெரிந்த
மெழுகுவர்திக்கு
வாழ்க்கையை
காப்பாற்றிக் கொள்ளத்
தெரியவில்லை
***

வண்ணத்து பூச்சியின் சிறகுகளில்
உழைப்பின் வியர்வைகளாய்....
மகரந்த துகள்கள்!
***

ஒரே முறைதான்
கன்னத்தில் அறைந்தேன்
காயம்
இடம் மாறி விட்டது!
வலி யில்லாமல்
எப்படி
சுற்றித் திரிகிறாய்?
***

கண் இழந்தவன் காதல்
கண்திறந்தது
இதயத்தின் வழியாய்
***
- மு.முகமது பாட்சா
பூங்கொத்திலிருந்து
நாகமொன்று வெளிவந்தது !
"பூங்கொத்தை வீசி விடு
என்னைவிட
அதுதான் விஷமானது" என்று
நாகம்
சொல்லிவிட்டு நகர்கிறது !
***

இசைக்கும்
உன் விரல்களுக்குத் தெரியாது
இசைப்பது
என் பெயரென்று!
***
பறவைகள்
திரும்பி விட்டன...
கூடுகளைக் காணவில்லை!
***

இருளை
ஓட்டத் தெரிந்த
மெழுகுவர்திக்கு
வாழ்க்கையை
காப்பாற்றிக் கொள்ளத்
தெரியவில்லை
***
வண்ணத்து பூச்சியின் சிறகுகளில்
உழைப்பின் வியர்வைகளாய்....
மகரந்த துகள்கள்!
***

ஒரே முறைதான்
கன்னத்தில் அறைந்தேன்
காயம்
இடம் மாறி விட்டது!
வலி யில்லாமல்
எப்படி
சுற்றித் திரிகிறாய்?
***
கண் இழந்தவன் காதல்
கண்திறந்தது
இதயத்தின் வழியாய்
***
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment