Sunday, 8 October 2017

அறிவு ஜீவிகள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

இலக்கிய உலகிற்குள் 
சில பிரபலங்கள் மட்டுமே 
இருக்கிறார்கள் , 

அவர்களுக்குள் 
அவர்களே பேசிக் கொள்வார்கள் 

அவர்களுக்குள், 
அவர்களே வசைந்தும் கொள்வார்கள்  

ஏனென்றால், 
அவர்கள்தான் என்றும் அவர்களாம் 

அவர்களின் மொழியும் விசித்திரமானது  
தமிழை விட்டு விலகி 
கூவம் நதியிலும் குளித்தெழுந்தும்,

அவர்களுக்காக சில பத்திரிகைகள்  
அவர்களுக்காகவே , 
அவர்களால் சில பத்திரிகைகள் 

அவர்கள் செத்தால், 
மற்றவர்கள் அழுகிறார்களா ,
என்றும் கூட  பார்ப்பார்கள்  

அவர்கள் சிரித்தால், 
மற்றவர்களும் 
சிரித்தேதான் ஆக வேண்டும்  

அறிவு ஜீவிகளின் உலகில்
நுழைந்துவிடாதீர்கள்,
அவர்கள்
முட்டாள்களாக மாறிவிடக் கூடும் 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts