Sunday, 22 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 82



காதல் 

கடலோங்கிக் கரைதழுவப் பார்த்து 
உடலுள்ளிருந்து தவித்தெழுந்தாத்மா 
மெய்யிறங்கியுன் விழி தேடி வருகிறது. 
பொய்யெது மெய்யெது 
போதிமாதவச் சிரிப்பெதுவென்றறியா 
மென்மயிர்ப் பூனைபோலேங்கி நடந்தவென்னிதயம் 

உன்மார்பிலணைகிறது. 
முலைதழுவி முன்னெற்றி மயிரொதுக்கி 
முத்தமிட்டுன் சிறுவுதட்டுச் சாரலையும் தாவென்று தவித்து 
ஆண்மையும் பெண்மையும் பெயரழியும் 
காலத்துள் போய்வரவாவென்று கேட்பேன். 
கேசம் கலைந்து கிடந்தவுன் கழுத்தில் புதைந்து புதைந்து 
நீலம் படர்ந்த நெடுவான முடிவுக்கும் போவேன். 
மெய்யும் காதலும் ஒன்றென்றுயிர் சுடர்கிறது. 

தேவஅபிரா (ஆடி - 1997 )

No comments:

Post a Comment

Popular Posts