சுட்டதாக சொல்கிறார்கள் ,
சுடாமல் சுட்டதாகவும் சொல்கிறார்கள்
சுட்டார்களா ? சுடவில்லையா ?
படைப்புகளில் சுட்டதைதான் சொல்கிறேன் !
***
ஆறுதலைத் தேடி
சுயம் தொலைந்து நிற்கிறேன் ,
ஆறுதலும்,
ஆறுதலை தேடி
அலைந்து கொண்டிருக்கலாம் !
***
ஒவ்வொரு இதழ்களாக
பிய்த்தெறிகிறேன்,
காம்புகள் மட்டும் கையிலுள்ளது ,
பூக்களைக் காணவில்லை !
***

நீ
என் கையை
பிடித்திருப்பது,
தொலைந்து விடுவேன் என்றா?
ஓடி விடுவேன் என்றா?
***

என் அப்பன் தொலைத்த நிலத்தை
அடையாளம் காண முடியவில்லை?
அல்பமாய் பார்க்கிறான்
அடுக்கு மாடி சொந்தக் காரன்!
***

காதல் கடிதங்களை
சேர்த்து வைத்திருக்கிறேன்.
பிரியும் போது கொடுத்தனுப்ப!
***

பிரியமானவனே...
இதயத்தை பிளந்து காட்ட
என்னால் முடியாது!
அதில் இருக்கும்
அத்தனை
கேள்விகளுக்கும்
உன்னாலும்
பதில் சொல்லவும் முடியாது!
.......இப்படியே நகர்வோம்.....
***
ஓடி விளையாடுகின்றன
தட்டாம் பூச்சிகள்....
மழை வருமா?
.
***

பூ வெல்லாம் கேட்டு பார்!
வாழ்க்கையின் வடிவங்களை
வகை வகையாய் சொல்லும்!
அழகின் ஆராதனைகள்
மற்றைய ஜனனத்தின்
அஸ்திவாரம் என்று!
ஒற்றை நாள் ஜனனம்
மற்றை நாள் மரணமென்று!
***
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment