Monday, 4 December 2017

நான் இரசித்த கவிதைகள் - 102


படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளுமையை உணரவைக்கும் கருப்பு கண்ணாடிகள், கண்களுக்கான கண்ணாடிகள் மற்றும் குளோஸ் அப்

மற்றுமொரு ஜீவிதம்
என் அழிவிற்குப் பிறகான உனது நாட்களில் 
நூலாம்படையாய் நெய்து கிடக்கிறேன்
உன் ஆடைகளில் எல்லா நிறங்களுக்குள்ளும் 
என் பிரியத்தின் நறுமணத்தை கசியவிட்டபடி 
உணரத் தருகிறேன்
உன் மோதிர விரல் நகம் மட்டிலும் பூசும் 
பட்டுப்பூச்சியின் வண்ணமெழுகை 
எங்கிருந்தாலும் கொணர்ந்து 
உனக்கு அருகாக்குகிறேன்
உன் அந்தரங்க நிர்வாணத்தையும் 
உன் அதீத காமத்தையும் 
ஏதுமற்ற ரூபத்தில் உணரக்கண்டு 
உனக்கு ஒவ்வொருபோதும் 
போதிக்கச் செயகிறேன்
உன் பசிய தனிமையின் பின்புலத்தில் விரவியிருக்கின்ற உயிர்மையை
கூந்தல் வருடி செவிகளுக்குள் 
இரகசியம் ஓதிக் களிக்கச் செய்கிறேன்
உன் கனவின் வெளிகளில் முகிழும் 
இரசாயன நிறமிகளை 
உறுஞ்சிப் பறக்கும் ஆத்மப்பூச்சியை 
நான் சிலப்போது வரைந்துப்போகிறேன்
நானாக இல்லாதபோதும் 
உன் சமீபத்தில் இருக்கு ஒவ்வொன்றுக்கும் 
அசைவின் பரிணாமத்தை வழங்கித் திரிகிறேன்
ஈர்ப்பின் விசை அழுந்தி மோகிக்கும் 
ஆலகால பிரக்ஞை சுபாவிக்கி 
உன் அட்சைய தாட்சண்ய வளைந்த 
கோடுகளை நகலாக்கி அதன் விழாநிழலை 
என் முடிந்த காலத்திற்குள் மிகைசெய்து 
அனுப்பும்படி ஏதிடமோவெல்லாம் மன்றாடுகிறேன்
மெழுகுருகி சப்தம் திரியும் பக்கமெல்லாம் 
நின்முகம் கருப்பு வெள்ளையென மேயுமென்பதிடம் கூடிக்களிக்கிறேன்
ஜீவன்செய்யும் இயக்கத்தின் மறுப்பக்கம் 
நான் தற்கொலை செய்துகொண்ட 
நைலான் கயிற்றிலிருந்து 
ஒரு மினுக்கட்டான் உயிரியொன்று 
மெதுமெதுவாய் தாழப்பறந்துச் செல்கின்றன

அனாமிகா

No comments:

Post a Comment

Popular Posts