Wednesday, 27 December 2017

நான் இரசித்த கவிதைகள் - 110

அறை 
.
அறை மிகவும் பாதுபாப்பாக இருக்கிறது. 
கோடைகாலம் குளிர்காலம் 
எதுவும் பாதிக்காத வகையிலிருக்கிறது. 
எனக்குத் தோவையானதை அறைக்குள்ளே பெறுகிறேன். 
இந்த அறை 
எனது எதிர்ப்புகளை அலட்சியப்படுத்துகிறது. 
உனது அடையாளமெங்கே என இளிக்கிறது. 
இந்த அறையில் நான் 
வாழ்ந்துகொண்டிருப்பதாகவும் 
அவர்களால் அவர்கள் அறைகள் நிரம்பிவழிவதாகவும் 
எனக்கு தகவல் வருகிறது. 
இது என்ன விசித்திரம்! 
அறைகளுக்கு எப்போது கண்கள் முளைத்தன? 
இனி எனக்கு நிம்மதியில்லை. 
நான் நானாக இருக்கவே முடியாது. 
வெளியே எனது ஆடைகள் காய்கின்றன. 
அறைக்குள் என் ஆடைகளை மீறி 
கண்கள் என்னை ஒற்றறிகின்றன. 
நேற்று அவளும் இப்படித்தான் என்றாள். 
*

சுகந்தி சுப்ரமணியம் (அமரர்)
நூல் : மீண்டெழுதலின் ரகசியம்

No comments:

Post a Comment

Popular Posts