
கவிதைகளில் வாழ்கிறவன்,
கதைகளுக்குள்ளும் பிரவேசிக்கிறான்.
வானத்தை மடக்குவதும்,
விரிப்பதுவும்
அவனுக்கு கை வந்த கலை !
நட்சத்திரங்களை இடம் மாற்றி
பண்டங்களை
உருமாற்றத் தெரிந்தவன்,
அவன் வானத்தில் மட்டும்
காதலென்ற ஒற்றைச் சிறகு
எப்பொழுதும் பறந்து கொண்டேயிருக்கும் !
எழுத்துகளில் கண்கள் வரைந்து
கோபம் காட்டவும்,
கருணைக் காட்டவும் தெரிந்தவன்,
எழுத்துகளுக்குள்
எழுத்தாக வாழக் கற்றவன்,
வார்த்தைகளால்
ஆயுதங்களைத் தயாரிக்கத் தெரிந்தவன் !
அவனது கனவுலகமும்
திறந்து வைத்த தந்திரவெளி,
அந்த மந்திரவெளியில்
யாரும் பிரவேசிக்கலாம் ,
பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்!
அவனென்றுமே,
மகா கவியாக இருப்பது கிடையாது,
அதன் உயரம், கோபுரத்திலேற்றி
மற்றவர்களால்
அண்ணாந்து பார்க்க வைத்துவிடும்,
அவனென்றுமே, சாதாரணன்தான் !
- மு.முகமதுபாட்சா*
28/12/2016
No comments:
Post a Comment