Monday, 18 December 2017

சுனாமி என்றும்...

படம் இதைக் கொண்டிருக்கலாம்: தண்ணீர், சமுத்திரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

மௌனத்தைக் கடத்தி சிறை வைக்கிறேன், 
சப்தங்களின் கூட்டுத்தொகை 
வனத்தை அசைத்துப் பார்க்கிறது , 
போதி மரத்தின் கீழ் 
கரையான் புற்றுகள் ஆக்கிரமிக்க, 
புற்றீசல்களைப் புசிக்க 
அகடூரிகள் ஆக்கிரமிப்புச் செய்கின்றன, 
புத்தன் சிலையாகவே இருக்கிறான், 
அவன் மடியிலேறி 
பாம்புகள் சல்லாபம் செய்கின்றன ! 
மௌனத்தைக் கிழித்து வந்த அம்பொன்று 
சமாதானப் புறாவை சாய்த்துவிட்டுப் போகிறது, 
வேடனுக்கான இரை, 
வல்லூற்றுக்கென்ற விதியை யார் மாற்றுவது ? 
வலிகளும் ,இழப்புகளும் 
மௌனத்திற்குள் புதைந்தெழும் போது 
கடலின் சீற்றம் வனத்திற்குள் நுழைந்து, 
போதிமரங்களை சாய்த்துவிட்டு நகரும் 
அலைகளின் நீரில்தான் 
பாம்புகளும் செத்து மிதக்கின்றன 
கரையான்களோடு...

இந் நிகழ்வை சுனாமி என்றும் சொல்லலாம், 
மௌனத்தின் பெருத்த கோபமென்றும் சொல்லலாம் !

நட்புடன்...முகமது பாட்சா*
19/12/2016

No comments:

Post a Comment

Popular Posts