என்னை ஆள்கிறது அமைதி ,
உடன் பிறாவா சகோதர, சகோதிரிகளே,
சாந்தியும் சமாதானமும்
உங்களை நோக்கியே மொழிகிறேன்
என்னைச் சூழ்ந்து நிற்கும் சூட்சமங்களை
நான் மிகவும் நேசிக்கிறேன்
என் இறைவனின் அன்பிற்கு
என்றுமே மாற்றுகள் கிடையாது ...
காதலை, கஷ்டங்களாக
இறக்கி வைத்தவன் அவன்தான்
அவன் அழகிற்குள்தான் மூழ்கிக் கிடக்கிறேன்,
நிறைவில்லா மரணமென்னை
நிலைக் கிடத்திப் போனாலும்,
அவன்தான் என் இதயத்தின் காதல்வாசம்,
அவன்தான் என் பயணத்தின் கிப்லாவாகும்,
துன்பங்களென்னை சூழ்ந்தால் என்ன ?
மருத்துவன் என்னருகே இருக்கிறான் ,
மகிழ்ச்சியில் உறுதியாக வேர் ஊன்றிய
பரவசத்தின் பரவசமவன்,
நேசனே சங்கமத்தில் சங்கமிக்கத்தான்
துன்பங்களையும்
காதலாகவே ஏந்திக் கொள்கிறேன் ,
இறைவா ! பிறவியின் முழுமை
உன் அன்பிற்காகவே ஏங்கிக் கிடக்கின்றது,
ஏற்றுக்கொள் !
ராபியத்துல் பஸ்ரியா
(பெண் சூஃபி)
தமிழ் : முகமது பாட்சா*
கி.பி 695 ல் அரபு நாட்டில் பிறந்த பெண் சூஃபி யாவார்.
இவர் இறைவன் மீது அளப்பறிய அன்புக் கொண்டவர்.
கவிதைகள் எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தார்.
No comments:
Post a Comment