Monday, 25 December 2017

எட்டு பக்க கதை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

எட்டு பக்கக் கதையை வைத்துக் கொண்டு 
இதுதான் நாவலென்கிறாள், 
சிரித்துவிட்டேன், 
ஒற்றை வார்த்தை வைத்துக் கொண்டு 
கவிதை எழுதும் போது , 
இதுவும் சாத்தியமென்றாள் , 
உள்ளே நுழைந்து பார்த்தேன், 
ஒற்றை வரியைக் கடக்கும் முன்பே 
ஓராயிரம் நினைவுகளை மீட்டு வைக்கிறாள் , 
அவளின் இரவுகளும் பகல்களும் 
என்னை கடத்திச் செல்கின்றன , 
அவளின் அழுகைகளை என் கண்களில் 
அனாயாசமாய் இறக்கி வைக்கிறாள், 
அவளின் கதையின் நாயகன் 
நானில்லை என்றாலும் 
நானும் இருக்கிறேன் தோழனாக ... 
இன்னமும் படிக்காத பக்கங்கள் 
இருக்கத்தான் செய்கின்றன , 
ஆம், 
அவளிடமும் நான் 
படிக்காத பக்கங்கள் இருக்கத்தான் செய்கின்றன , 
சிலச் சிரிப்புகளும் 
அவள் பக்கத்தில் சிதறிக் கிடந்தன , 
அவளின் சிரிப்புகளில் நான் இயைந்த போது 
என் கண்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள், 
அப்போதுதான் அவளின் கண்களைக் கவனித்தேன், 
மிச்சமுள்ள கதையை , 
இன்னமும் அவள் எழுதாமல் வைத்திருப்பதை,
.
இப்போதும் சொல்கிறேன் 
அவள் எட்டு பக்கத்தில் எழுதியிருப்பது நாவலல்ல, 
பெரும் காவியம் 

- நட்புடன்...முகமது பாட்சா*
25/12/2016

No comments:

Post a Comment

Popular Posts