முன்னோரு காலத்தில்

ஒரு புதுக்கதை தொடங்கும் முன்பே,
இந்தக் கதை
இப்படிதான் முடியுமென்று சொன்னார்கள் !
இல்லையில்லை,
இது,
வேறொரு தளத்திற்குச் செல்லும் கதையென்று,
சொல்லப்பட்டது !
எழுதி முடித்த கதையை
வாசித்துவிட்டதாகச் சிலர் சொன்னார்கள் !
எழுதிக் கொண்டிருக்கும் கதையை,
யாரும், படித்திருக்க முடியாதென்று,
எழுத்தறிக்கைகள் வாசிக்கப் பட்டன !
நம்பிக்கை வாசகர்கள்,
ஆமாம்! ஆமாம் ! என்றார்கள் !
முன் கூட்டிச் சொன்னவர்கள் எல்லோரும்,
கதைவிடக் கற்றவர்களென்று
எழுதுகிறவர்கள் தரப்பில்
எடுத்து வைக்கப் பட்டது !
இப்படியும் இருக்கலாம் என்று கதைத்தவர்கள்,
எழுத்துலகின் துரோகிகளென
விமர்சிக்கப் பட்டார்கள் !
சில திருத்தங்கள் செய்யப்பட்டு
கதை
வேறொரு தளத்திற்கு நகர்த்தப் பட்டது !
இந்தக் கதை, அப்படி முடியும் கதையல்ல,
முடியாத கதைதான்
என்று நிம்மதி வந்தது !
முன் கூட்டிச் சொன்னவர்களெல்லாம்,
முடங்கிக் கொண்டார்கள்,
அவர்களை
முட்டாள்களாய்ப் பார்த்தது வாசகர் உலகம் !
எழுதுபவரே இல்லாமல் எழுதப் படுகிறதோ? !
என்ற சந்தேகம் வந்தவுடன்,
திடீரென்று கதை ,
முடிந்துவிட்டதாகவே அறிவித்து விட்டார்கள் !
அதிர்ச்சியில் வாசகர்கள் ஆர்ப்பரித்த போது,
மீண்டும் முடியவில்லையென்று சொல்லி
முற்றிலுமாகவே முடித்துவிட்டார்கள் !
அடுத்துத் தொடரும் சரித்திரக் கதையில்,
புதிய திருப்பங்கள் இருக்குமென்று
புதுக் கதையொன்றை விடுகிறார்கள்,
ஆனாலும், முடிந்த கதையில் மட்டும்,
இளவரிசியின் மரணம்,
மர்மமாகவே முடிந்து போனது !
- மு.முகமது பாட்சா*
07/12/2016

ஒரு புதுக்கதை தொடங்கும் முன்பே,
இந்தக் கதை
இப்படிதான் முடியுமென்று சொன்னார்கள் !
இல்லையில்லை,
இது,
வேறொரு தளத்திற்குச் செல்லும் கதையென்று,
சொல்லப்பட்டது !
எழுதி முடித்த கதையை
வாசித்துவிட்டதாகச் சிலர் சொன்னார்கள் !
எழுதிக் கொண்டிருக்கும் கதையை,
யாரும், படித்திருக்க முடியாதென்று,
எழுத்தறிக்கைகள் வாசிக்கப் பட்டன !
நம்பிக்கை வாசகர்கள்,
ஆமாம்! ஆமாம் ! என்றார்கள் !
முன் கூட்டிச் சொன்னவர்கள் எல்லோரும்,
கதைவிடக் கற்றவர்களென்று
எழுதுகிறவர்கள் தரப்பில்
எடுத்து வைக்கப் பட்டது !
இப்படியும் இருக்கலாம் என்று கதைத்தவர்கள்,
எழுத்துலகின் துரோகிகளென
விமர்சிக்கப் பட்டார்கள் !
சில திருத்தங்கள் செய்யப்பட்டு
கதை
வேறொரு தளத்திற்கு நகர்த்தப் பட்டது !
இந்தக் கதை, அப்படி முடியும் கதையல்ல,
முடியாத கதைதான்
என்று நிம்மதி வந்தது !
முன் கூட்டிச் சொன்னவர்களெல்லாம்,
முடங்கிக் கொண்டார்கள்,
அவர்களை
முட்டாள்களாய்ப் பார்த்தது வாசகர் உலகம் !
எழுதுபவரே இல்லாமல் எழுதப் படுகிறதோ? !
என்ற சந்தேகம் வந்தவுடன்,
திடீரென்று கதை ,
முடிந்துவிட்டதாகவே அறிவித்து விட்டார்கள் !
அதிர்ச்சியில் வாசகர்கள் ஆர்ப்பரித்த போது,
மீண்டும் முடியவில்லையென்று சொல்லி
முற்றிலுமாகவே முடித்துவிட்டார்கள் !
அடுத்துத் தொடரும் சரித்திரக் கதையில்,
புதிய திருப்பங்கள் இருக்குமென்று
புதுக் கதையொன்றை விடுகிறார்கள்,
ஆனாலும், முடிந்த கதையில் மட்டும்,
இளவரிசியின் மரணம்,
மர்மமாகவே முடிந்து போனது !
- மு.முகமது பாட்சா*
07/12/2016
No comments:
Post a Comment