Monday, 4 December 2017

நியாயத்தர்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

வரலாற்றின் 
இராசத் தந்திரங்கள் 
அவ்வப்போது 
காய்களை 
நகர்த்தத்தான் செய்கின்றன ! 

கீழேயிருக்கும் சிப்பாய்களுக்கும் 
மகுடம் சூட்டிக் கொள்ள 
ஆசை வந்து விடுகிறது ! 

எட்டிப் பார்ப்பவன் கூட 
இருப்பதை 
எடுத்துக் கொள்ளத்தான் 
பார்க்கிறான் , 
பறித்துக் கொண்டவனுக்கு 
உடன் இருந்தவன் 
பங்காளியாகி விடுவான் ! 

ஆட்டம் தொடங்கும் போது 
அணியில் இருந்த காய்கள் 
நகரும் வேளையில் 
தானும் நகர்ந்து விடுகின்றது 
எதிரெதிர் அணிகளுக்கு ! 

அரசியல் சூதுகளெல்லாம் 
சாணக்கியன் பெயர் சொல்லி 
நியாயங்கள் செய்கின்றன, 
சாணக்கியன், 
என்ன நியாயத்தானா ? 

பதவிகளுக்குள்தான் 
பதுங்கி வாழ்கிறது, 
தேச நலன், 
பதாகைகளை 
உயர்த்திப் பிடிப்பவர்கள், 
பதுங்கு குழிகளில், 
பரிசீலனை செய்தவர்கள்தான் ! 

ஆட்சிக் கட்டில் 
யாருக்கென்பதுதான் 
அடுத்தடுத்ததில் பரிசீலனை, 
அழுகையும், கண்ணீரும் 
அதற்கடுத்துதான் ! 

- மு.முகமது பாட்சா 05/12/2016

No comments:

Post a Comment

Popular Posts