
காலம் குதிரையாக மாறுகிறது
உட்கார்ந்திருக்கிறவன் இடம் மாறுகிறான்
நிழல்களைப் பிடிக்கத்தான்
இத்துணை வேகமாக ஓடுகிறார்கள்
தேவதைகளென்பது மாயவார்த்தை
மயக்கமென்பது காலத்தின் படிமம்
நின்றவிடத்தில் நின்று கொண்டு
வந்துவிட்டதாகச் சொல்பவன் மனிதன்
கற்பனை அவனை உண்ணுகிறது
கர்வம் அவன் தலையின் அழுத்தம்
நிர்வாணம் நிஜம் மூடப்பட்டது
வெளிச்சம் பார்வைகளின் மாயை
இருட்டு நிஜம் - நிழலென்கிறான்
பூமியின் மணம் அவன் உடல் வாசம்
பறந்தாலும் சீரணிப்பது மண்
ஆசை - மாயையின் மாபெரும் வலை
மாட்டியவன் கரைதான் கடலென்கிறான்
கடல்தான் வாழ்வின் தத்துவம்
மணற்துகள்கள் எண்ண முடியாத நிராசைகள்
சுவடுகள் மறையக் கூடியது
அலைகள் எப்போதும் ஓய்வதில்லை
காலம் குதிரையாக மாறுகிறது
உட்கார்ந்திருக்கிறவன் இடம் மாறுகிறான்
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment