Sunday, 17 December 2017

நானாக நான்

தானியங்கு மாற்று உரை இல்லை.

விந்துக்குள் உயிராக 
கருவிற்குள் சேராமல் 
வெளியேறி நானிருந்தால் 
நானென்ற நானே 
காணாதிருப்பேனோ !

உருவாகித் திருவாகி 
உருவாகாக் கருவாக 
உடைந்தே கலங்கியிருந்தால் 
கவலைகள் காணாத 
கனவாக ஆகியிருப்பேனோ !

நிலையாத இவ்வுலகும் 
நில்லென்றாகியிருந்தால் 
நிலையான இல்லென்றே 
நிலையாக நின்றிருப்பேனோ ! 


-மு.முகமது பாட்சா*
17/12/2016

No comments:

Post a Comment

Popular Posts