
இதயம் என்பது,
இரண்டு ஓசைகளின் சங்கமமாக
இருக்க வாய்ப்பேயில்லை ,
மூளையின் முடிச்சுகளில்தான்
நினைவுகள் கட்டப் பட்டிருக்கின்றன ,
தமனிகளின் துடிப்புகளை
முடிச்சுகள், மாற்றி வைக்கக் கூடும்,
நினைவுகளின் முடிச்சுகளை
நீதான், அதிகம்
சிக்கலாக்கி வைத்திருக்கிறாய் ,
இரத்த நாளங்களின் அழுத்தத்தில்,
உன் அழுத்தமும் அழுந்திக் கிடக்கிறது,
வியர்வைத் துளிகளை வெளியேற்றும்
உடலுக்கு மட்டுமே தெரியும்
உன் ஆதிக்க விசைகள் ,
தூக்கத்தைத் தொலைக்கச் சொல்லி,
என் கண்களுக்குக் கட்டளையிடுகிறாய் ,
மூளையின் ஆதிக்கத்தை
நீத்தானே, முடக்கி வைத்திருக்கிறாய் !
உடலியலுக்குள் ஒளிந்து கொண்டு
கண்ணாமூச்சியாட,
உனக்கு மட்டுமே தெரிந்தக் கலை !
எனக்கும் கற்றுக்கொடு,
உன் உடலியலுக்குள் ஒளிந்து கொண்டு
நானும் விளையாட !
-மு.முகமது பாட்சா*
16/12/2016
No comments:
Post a Comment