
இரவில் விழித்துக் கொண்ட குரங்கு
வனத்தை நோக்கி ஓடியது,
விழுதுகளைப் பிடித்து இடம் மாறியது,
கொத்துப் பழங்களை எச்சில் செய்தது,
சொட்டும் தேனை நக்கிச் சுவைத்தது,
முற்றும் மறந்த மோன நிலையில்
கொட்டும் மழையில் நனைந்து களித்தது ,
நதியில் மூழ்கி யெழுந்த வேளையில்
உருவம் தொலைத்து அழகனானது,
மனத்தைப் பிசைந்து வடிவம் செய்து
அழகியொருத்தியை அருகில் வைத்தது,
பஞ்சணையொன்றில் படுக்கவைத்து,
பழரசம் பருகி படர்ந்தக் கொடியாய்
பிணைந்து இணைந்தது ,
அழகியின் முகத்தில் அகோரம் துளிர்க்க
கோரம் மிகைத்து பிசாசன் ஆனது,
இரவும் தன்னை இழந்து நிற்க,
உருவம் தொலைத்து மனிதம் பூசி,
குரங்கும் , மனதில் இறந்து கிடந்தது !
- மு.முகமது பாட்சா*
20/12/2016
No comments:
Post a Comment