
ஒரு கணம்
ஒரு சொல்லை வீசிவிட்டுச் செல்கிறாய்
அந் நொடி
அஃது ஆயிரம் அம்புகள் புதைந்த பாறை
விழிகளைப் பறித்து வீசிவிடும் அஸ்திரம்
மனதிற்குள் உட்கார்ந்து பிறாண்டும் மந்தி
கனவுகளைப் பறித்துவிடும் படர் மின்னல்
காட்டுக்குள் அலையவிடும் கடுமிருட்டு
காதலை
கௌரவமாய்க் கொலை செய்யும் ஆயுதம்
தனிமைக்குள் கரைக்கும் அமிலம்
அச் சொல்லை அடர்வனத்தில் புதைக்கிறேன்
பற்றியெரிக்கிறது காட்டுத் தீ
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment