Tuesday, 5 September 2017

நான் இரசித்த கவிதைகள் - 56

ஒரு கவளம்

சிபிச்செல்வன் க்கான பட முடிவு

அடுத்தவேளை உணவிற்காகப் பொய்களைச்
சரளமாகப் பேசுகிறோம்.
அடுத்த வேளை உணவிற்காகப் பல்லக்குத்
தூக்குகிறோம்.

ஒரு கவளம் உணவிற்காக வாலைக் குழைக்கிறோம்.
ஒரு கவளம் உணவிற்காக ஏமாற்றுகிறோம்.
ஒரு கவளம் உணவிற்காகக் கொலை செய்வதற்காக ஏவப்படுகிறோம்.
ஒரு கவளம் உணவிற்காகப் புறம் பேசுகிறோம்.
ஒரு கவளம் உணவிற்காக எதையும் செய்யத் துணிகிறோம்.

அடுத்தவேளை உணவிற்காக எத்தனை வேடங்கள்
எத்தனை குரல்களில்
எத்தனை பாவனைகள்
எத்தனை…
எத்தனை…

அடுத்தவேளை சாப்பாட்டை உறுதி செய்துகொள்வதற்குதான்
இடைவிடாது
குற்ற உணர்வுடன் அவஸ்தைப்படுகிறோம்

நாற்றம் மிகுந்த தெரு சாக்கடையை உற்சாகமாகக்
கைகளால் அள்ளி அள்ளி சுத்தம் செய்கிறார்கள்
அடுத்தவேளை உணவைக் குறித்து
அவர்கள் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை.
.
 கவிஞர் சிபிச் செல்வன்

No comments:

Post a Comment

Popular Posts