Tuesday, 19 September 2017

நான் இரசித்த கவிதைகள் - 62

எனது குருதியை எடுத்துக்கொள்ளுங்கள்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் பலர் அமர்ந்துள்ளனர்


எனது குருதியை
எடுத்துக் கொள்ளுங்கள்
எனது சவப் போர்வையை
எடுத்துக் கொள்ளுங்கள்
எனது உடம்பின்
மிச்சத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

தனியனாய் சவக்குழியில் வைத்து
எனது சவத்தை
புகைப்படமெடுத்துக் கொள்ளுங்கள்

வெளி உலகுக்கு அதனை அனுப்புங்கள்
நீதிபதிகளுக்கு
மனசாட்சியுள்ள மனிதர்களுக்கு
மனிதநெறி கொண்ட மனிதர்களுக்கு
பரந்த மனப்பான்மையுள்ள மனிதர்களுக்கு
அதனை அனுப்புங்கள்

இந்தக் குற்றமற்ற ஆன்மாவின் பொருட்டு
உலகின் முன்
குற்றவுணர்வை அவர்கள் சுமக்கட்டும்

தமது குழந்தைகளுக்கு முன்
வரலாற்றுக்கு முன்
அவர்கள் குற்றவுணர்வு கொள்ளட்டும்
பயனிலாமல் ஆகின
பழிபாவமற்ற இந்த ஆன்மாவின் பொருட்டு

‘காப்பாளர்கள்’ அல்லது ‘சமாதானத்தின்’ கைகளில்
துன்புற்ற இந்த ஆன்மாவின் பொருட்டு
.
கவிதை: ஜூமா அல் தொஸாரி (கைதி)
.
நன்றி : மொழியாக்கம்.   யமுனா ராஜேந்திரன்

அமரிக்க அடக்குமுறையின் " குன்டனான்" என்ற சிறையில் வாடிய  கைதிகளில் ஒருவரின் கவிதை இது.
இன்று தமிழகத்தின் சிறைக் காவலுக்கும் பொருத்தமாகவே இருக்கும்.

No comments:

Post a Comment

Popular Posts