
சிறைகளுக்குள்
ஆட்பட்டு
எத்தனையோ காலமாச்சு ,
சாதியம் எழுப்பிய
சிறையின் சுவர்களில்
சூரிய ஒளிகள்
இருப்பதேயில்லை !
சாத்திரன் செய்யும்
கொலைகளுக்கும்
சூத்திரன் பொறுப்பென்று
எவன் எழுதினானோ,
அன்றே தொடங்கியது
அடிமையின் வாசனை !
நீதி தேவதையும்
நெளிந்து கொடுக்கிறாள்
ஆட்சிமையின் அதிகாரத்திற்கு
விசாரனைகளென்பது
ஜோடிக்கும் ஒப்பனைகளாக
மாறி விடும் போது
சிறை வாசம் என்பதும்
மரணத்தின்
மற்றுமொரு வாசல்தான் !
தீர்ப்புகள்
திருத்தபடுவதில்லை,
சாகடிக்கப் படுகின்றன !
யுக்திகள் மட்டுமே
யோசிக்கப் படுகின்றன,
மரணத்தின் காரணங்களுக்காக !
தீர்ப்புகளை நீங்களே
யூகித்து விடுங்கள்
அடுத்தக் கொலைகளுக்கான
காரணத்தை
ஆராயும் முன்பாக !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment