Tuesday, 19 September 2017

விசாரனை

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்

சிறைகளுக்குள் 
ஆட்பட்டு 
எத்தனையோ காலமாச்சு , 
சாதியம் எழுப்பிய 
சிறையின் சுவர்களில் 
சூரிய ஒளிகள் 
இருப்பதேயில்லை ! 

சாத்திரன் செய்யும் 
கொலைகளுக்கும் 
சூத்திரன் பொறுப்பென்று 
எவன் எழுதினானோ, 
அன்றே தொடங்கியது 
அடிமையின் வாசனை ! 

நீதி தேவதையும் 
நெளிந்து கொடுக்கிறாள் 
ஆட்சிமையின் அதிகாரத்திற்கு  

விசாரனைகளென்பது 
ஜோடிக்கும் ஒப்பனைகளாக 
மாறி விடும் போது

சிறை வாசம் என்பதும் 
மரணத்தின் 
மற்றுமொரு வாசல்தான் ! 

தீர்ப்புகள் 
திருத்தபடுவதில்லை, 
சாகடிக்கப் படுகின்றன ! 

யுக்திகள் மட்டுமே 
யோசிக்கப் படுகின்றன, 
மரணத்தின் காரணங்களுக்காக ! 

தீர்ப்புகளை நீங்களே 
யூகித்து விடுங்கள் 
அடுத்தக் கொலைகளுக்கான 
காரணத்தை 
ஆராயும் முன்பாக ! 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts