Monday, 18 September 2017

நானொரு நட்சத்திரம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உட்புறம்

வானத்தில் நானொரு 
நட்சத்திரமாக இருக்கலாம் , 
ஒற்றைப் புள்ளியாய் 
வெளிச்சம் சிந்துவதில் 
எனக்கொன்றும் பெருமையில்லை ! 
தூண்டில் மீன்களின் கவனத்தைக் கூட 
கடல் மீன்கள் பெறுவதில்லை ! 
உடைந்த பானையின் இரக்கம் 
ஒரு நொடி வருத்தமாய் 
மறைந்து போகிறது ! 
காட்டாற்று வெள்ளம் 
கணக்கில் வைத்துக் கொள்வதில்லை 
அடித்துச் செல்லும் 
அத்தனை பொருட்களையும் ! 
வெளிச்சமென்பதும் 
ஒரு வகை மாயைதான், 
கனவுகளுக்குள் யார் 
விளக்குகளை வைத்தது ? 
நிலவாக இருக்க வேண்டாம், 
நான் 
நானாகவாவது தெரியவேண்டும் 
இல்லையென்றால் 
நான் நானாகவே இருக்க முடியாது ! 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts