Friday, 29 September 2017

நான் இரசித்த கவிதைகள் - 69

பட்டு கோட்டை கல்யாண சுந்தரம் க்கான பட முடிவு

மக்கள் வயிறு காயுது
.
உண்மையைச் சொன்னவனை
உலகம் வெறுக்குமடா
உதவி செய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா

உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்துவிட்டால்
நல்லவனென்றுன்னை
நடுவில் வைத்துப் போற்றுமடா

இன்ப உலகில் செல்வம் அதிகம்
இதயந்தான் கொஞ்சம் - அன்பு
இதயந்தான் கொஞ்சம்
இதயமுள்ள மனிதன் கையில்
உதவும் பொருள் பஞ்சம் - இன்று
உதவும் பொருள் பஞ்சம் 

இரக்கம் கொண்டவனைச் செல்வம்
எதிரி யென்றே சொல்லுதடா
இல்லையென்றே ஏங்கும் நிலையில்
எட்டியுதைத்தே தள்ளுதடா 

தேனாறு பாயுது - வயலில்
செங்கதிரும் சாயுது - ஆனாலும்
மக்கள் வயிறு காயுது - அதிசயந்தான் இது
வகையாக இந்த நாட்டில் என்று
மாற்ற முண்டாகுமோ? - கலைந்த
கூட்டம் ஒன்றாகுமோ? 

 கவிஞர். பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

No comments:

Post a Comment

Popular Posts