Sunday, 3 September 2017

எங்கே போகிறது இந்தக் கவிதை

Image may contain: one or more people

அரவமொன்று ஆழ்ந்து விழுங்கும் 
கத்தும் தத்துவானின் உயிர் 
சற்றில் பிரியும் வேளையில் 
உற்றம் உறவுகள் சுற்றி நின்று கத்துமா? 
தெரியவில்லை ! 

அகவும் மயிலினோசைக் கேட்டு 
அழகிய தோகை விரிப்பில் லயிக்க 
மேகங்களுக்கென்ன வேலையாயில்லை ! 

கனவுகளைக் கூட்டிப் பெருக்கி 
வீசிவிட்டுப் போகிறானொருவன், 
நிஜத்தை தேடுவதும் நிதர்சனம்தான் ! 

அடுத்தவனின் பசிக்காக 
அழும் மனதுக்காரனும் 
தன் பசிக்காக 
சாப்பிடாமல் இருப்பதில்லை ! 

சுற்றிலும் பிழைகள் 
சூழ்ந்து நிற்கும் நேரத்தில் 
விடையம் தெரியாத விடைகளும் 
குழப்பத்தின் குழம்புகள்தான்! 

ஆசை வெறுத்தவன் 
சாப்பிடாமல் வாழவில்லை, 
புத்தனுக்கும் சீரணிக்காத உணவுதான் 
சாவிற்குக் காரணமாம் ! 

எதையோ சொல்லவந்து 
எங்கேயோ போகிறது இந்தக் கவிதை , 
இதன் பசி யாருக்குத் தெரியும் ? 

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts