
இசையின் ஓரங்களில்
எப்போதும்
உட்கார்ந்து கொள்கிறேன்,
மெளனத்தின் இருப்பிலும்
மெல்லிய சங்கீதம் தேவை !
கோபத்தின் சகதியில்
வீழும் போதும்
ஏதோ ஒரு பாட்டு
தூக்கி விடுகின்றது !
தாலாட்டு கேட்டு வளர்ந்த
தகறாராக இருக்கலாம்,
மழைத் துளிகளின் சப்தங்கள்
கவிதைகளாகும் முன்பு
இசைத் துளிகளாகத் தான்
அறிமுகமாகிறது !
வசைகளையும் இசைகளாகதான்
மொழி பெயர்த்துப் பார்க்கிறேன்,
கனவிலும் ஒரு சங்கீதம்
பின்னனி இசைக்கிறது !
கவிதைகளின் சங்கீதத்தையும்
வாசிக்க முடிகின்றது !
கதைகளிலும் சங்கீதம் இழைவதை
நான் கேட்கிறேன் !
இரவின் நிசப்தத்தில் விரவும்
சங்கீதத்தை யார் ரசிக்கக் கூடும் ?
இசையும் நானும்
ஒருமித்தே பயணிக்கின்றோம் ,
பிரிக்காத மொழியாக,
மறக்காத தமிழாக !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment