
இரவின் நிசப்தம்
நீண்ட மர நிழல்
ஒற்றை நிலா
உதிராத பறவைகளிசை
தளும்பாத குளம்
தவிக்காத தாமரை
சொட்டும் பனி
சுள்ளிகளின் நெருப்பு
ஒற்றையில் நீ
ஒருமையில் நான்
பேசாத பேச்சு
கவிழாதப் பார்வை
கொஞ்சம் தேனீர்
இத்தனை போதும்
ஓர் ஓவியம் வரைய,
காதலில் வீழ,
சாதலைத் தேட,
காவியம் எழுத,
கனவினில் மிதக்க,
கவிதையில் குதிக்க...
ஆ
ம்
இதுவும் கவிதைதான்
நீங்களும் படிக்க !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment