
வெட்ட வெளி பொட்டலிலே
புல் முளைத்தால் நட்பு அது
கட்டும் குளிர் காலத்திலே
கந்தல் துணி நட்பு அது
பட்ட மரக் கிளையினிலே
தொட்டெழுந்துளிர் நட்பு அது
சுட்டெரிக்கும் பாலையிலே
ஒற்றை நிழல் நட்பு அது
கால் இடறி விழும் போது
தாங்கும் கையும் நட்பு அது
நா தவிக்கும் நேரத்தினில்
சொட்டு நீரும் நட்பு அது
................மொத்தத்தில்.............
ஒட்டு மொத்த விரல்களுக்கும்
கட்டை விரல் நட்பு அது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment