
வார்த்தைகளுக்குள்தான்
இருவருமே வசிக்கிறோம்
சிலநேரம் வாசிக்கிறோம்,
சிலநேரம் வசைக்கிறோம்,
சிலநேரம் வார்த்தைகளே
வெளிநடப்பும் செய்கின்றன !
நமது மெளனத்தில் கூட
ஒரு சில வார்த்தைகள்
ஒளிந்து கொண்டுதான் நிற்கின்றன !
இப்போதும் நான்
ஒரு சில வார்த்தைகளை
தேடிக் கொண்டிருக்கிறேன்,
உன் வார்த்தைகளோடு
என் வார்த்தைகள் உறவாட !
.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment