Friday, 8 September 2017

எங்கே தொலைந்து போனேன்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் அமர்ந்துள்ளனர், வெளிப்புறம் மற்றும் இயற்கை

கண்ணயர்ந்த வேளையில்தான் 
காணாமல் போயிருக்க வேண்டும் , 
என்னை நானே எப்படித் தேடுவது? 
கவிதைகளில் இருப்பது நிழல் மட்டும்தான், 
நிஜமே நிஜமில்லை யென்பதும் 
எப்படிச் சரியாகும் ? 
கண்ணசைத்தாள் என்பதற்காக 
அவள் களவாடியிருக்க வாய்ப்பில்லை ! 
கனவுகளில் அவளோடுதானே இருந்தேன்! 
கவலைகள் தின்றிருக்கலாம் , 
கடன்கள் காணாமல் போக்கியிருக்கலாம், 
காணமல் போனவனைத் தேடி 
என்ன ஆகப் போகிறது ? 
மரணம் வந்தவனை எழுப்பவாச் செய்கிறோம் ? 
இப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், 
தொலைந்துப் போனவன் 
ஒரு நாள் தானாக வருவான், 
அப்போது என்னிடம் கேட்டுக் கொள்ளலாம் 
'எங்கே நான் தொலைந்து போனேன்!' என்று

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts