
காட்சி ஒன்றில்
கண்களால் பேசிக் கொண்டோம்
காதல் சுகம்
இதயத்தில் வலம் வந்தது,
காட்சி இரண்டில்
தலையணை இடம் மாறியது
இரவுகளும் பகல்களாய் விடிந்தன,
மூன்றில்தான்
புன்னகையைப் பகிர்ந்தோம்
கவிதை மொழி சரளமாக வந்தது,
பெயருடன் வார்த்தைகளும்
நான்கில்
இடம் மாற்றிக் கொண்டோம்,
விளையாட்டாய் விரல்கள்
ஐந்தில் உரசிக் கொண்டன,
ஆசையின் படிமத்தோடு,
ஆறில்தான் அவன் ஐ லவ் யூ
ஆங்கிலத்தில் சொன்னான்,
பட்டாம் பூச்சிகள் வானில் பறந்தன,
ஏழில் அங்கீகரித்த இதயம்
இதழ்களுக்குள் ஆழ்ந்து தேடியது
இளமையான காதலை,
காட்சி எட்டில்
கட்டிலறை கடலாய் விரிந்தது,
ஒருவரையொருவர் போர்த்திக் கொண்டோம்,
ஒன்பதில்தான் உணர்ந்தேன்....
மாதம் மூன்றென்று...
வயிற்றில் துயரம் எட்டி உதைத்தது,
காட்சி பத்தில்
அவன் காணாமலேயே போனான்
அடுத்த வீட்டின் பெருமையோடு.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment