
முதுமையின் முத்தாய்பில்
உதிர்கிறது மனம்..
.
இளமையின் ஆட்டங்களில்
தளர்வை எள்ளிய நாட்கள்!
.
முதுமையின் குறைகளை
திமிரென்று தள்ளிய திமிர்கள்!
.
பட்டால்தான் தெரிகிறது
பட்டினத்தான் வரிகள்!
.
.....தொலையட்டும் கிழட்டு பருவம்....
***

சுற்றி திரிந்த பறவை
நூலறுந்து
கீழே விழுகிறது...
.
பட்டம் விட்டவன் மனம்
பதறுகிறது!
.
மட்டில் எதுவும்
நிலையில்லை...
.
மனத்தின் பிரமை
சுற்றுகிறது உலகம்!
.
.....நிலையான வாழ்வைத் தேடி!.....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment