
எரிகின்ற தீயின்
விறகுகளைப் பிடுங்கி
நதியினில் எறிகின்றேன்,
வெப்பத் தீயில்
வீழ்ந்து கிடந்த பறவைகளுக்கும்
உறவுகள் இருக்கும் ,
கூட்டடைவின் வேளையில்
தேடல்கள் நடக்கும் ,
நாளை எதிர் பார்த்து
நாளைகள் நகரலாம் ,
நதிக்கும்
எனக்கும் மட்டும்தான் தெரியும்,
பறவைகளின் மரணம்
மரணமான விஷயம் !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment