
அனல் தகிப்பின் அந்தகாரப் புகையில்
தனம் புதைந்து தழல் பறிக்கும் வேளையில் ,
தழல் விலக்கி நுழையுமோர் மோட்சசுகம்,
நிழலொருக்கித் தரும் தேனமுதுச் சுவையில்
பிழை நீக்கு ,
துளிர்த்த வியர்வையின் ஈரமழை நனைப்பில்
இதழ் வெளுக்கச் சுவையீர்ப்பில் ,
கட்பொறிகள் நான்கும் செந்தூரம் பூசிக் களிக்க ,
கலைக்க, களைக்க ,
உள் நுழையும் உருவகர்களில் இனம் சேரும்
தளபதியே ,
ஐயிரண்டில் அடையாளம் தனைப் பதிக்க
வெளிவரும் நடை வாயிலில் ,
நடந்ததொன்றும் நாடகமில்லை !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment