Friday, 29 September 2017

நாடகமில்லை



அனல் தகிப்பின் அந்தகாரப் புகையில் 
தனம் புதைந்து தழல் பறிக்கும் வேளையில் , 
தழல் விலக்கி நுழையுமோர் மோட்சசுகம், 
நிழலொருக்கித் தரும் தேனமுதுச் சுவையில் 
பிழை நீக்கு , 
துளிர்த்த வியர்வையின் ஈரமழை நனைப்பில் 
இதழ் வெளுக்கச் சுவையீர்ப்பில் , 
கட்பொறிகள் நான்கும் செந்தூரம் பூசிக் களிக்க , 
கலைக்க, களைக்க , 
உள் நுழையும் உருவகர்களில் இனம் சேரும் 
தளபதியே , 
ஐயிரண்டில் அடையாளம் தனைப் பதிக்க 
வெளிவரும் நடை வாயிலில் , 
நடந்ததொன்றும் நாடகமில்லை !

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts