Thursday, 28 September 2017

சூறாவளி

.........#சூறாவளி.........

தானியங்கு மாற்று உரை இல்லை.

சுழன்றடித்த காற்றை
'சூறாவளி' யென்றார்கள்!
_____சிலர், 'விதி' யென்றார்கள்?
காமத்தின் குழம்பில்
குளித்தெழுந்த கொடுரன் போல்
பார்த்தவிடமெல்லாம்
பரவிச் சென்றது!
------காமத்தின் மிச்சங்களாய்
நகரங்களும், கிராமங்களும்...
பொலி விழந்து
நகக் கீரலாய்!
-------தென்றல் வீசிய தென்னைகளையும்
சிதிலமாக்கி சிரித்தது காற்று!
-------முகவரி எழுதிய மூர்க காற்று
நாணலிடம் தோற்றது வெட்கம்தான்!
ஆம்...நாணல் தலை நிமிர்ந்தது!

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts