
அழுகையின்
விசும்பல்கள் இடையே
தூலமாகத் தேகம்!
.
மார்பில் புதைந்து
மாய்ந்து போக நாட்டம்...
...தொண்டைக் குழியில்
ஏதோவொன்று தடுக்கிறது!
.
அணுத் துகல்களின்
வெடிப்பில்
புகை மூட்டம்!
அவனின்
நினைவுச் சிதறல்கள்..
தேகம் முழுதும்
தெரித்து நிற்கிறது!
.
அவன்...
பறப்பானா?
மிதப்பானா?
.
சுவனத்தில்
நின்றுக் கொண்டு
"வா!" வென்றழைப்பானா?
கடும் நரகத்தின்
வெளியில் நின்று
"போ!"என்று உரைப்பானா?
.
அவனது ஆளுமைகள்
பறந்து நழுவி
அன்பு மட்டும்
வழிந்து நிற்கிறது!
.
அவன் தந்த
எச்சில் முத்தங்களின் ஈரம்
உதட்டின் வழி நுழைந்து
இதயத்தில்
மிச்சமாய் இருக்கிறது!
.....காதலின் மரணம் வேதனை!.....
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment