அக்னி

என்னிடமே பகை கொண்டு
ஏற்றிவிட முயன்றிட்டாலும்
நொடியில் நான் எரிவேன்,அணைவேன்
நிமிஷத்தில் சாவேன்,பிறப்பேன்
வாழ்வென்றெனக் கொன்றில்லை
தாழ்வென்று ஏதுமில்லை
இளமையுடன் இருப்பேன் என்றும்
எரியும் தொழில் தலை எழுத்து
நட்பென்னும் உறவிலுண்டு
பகைமையின் போல் விதைகள்
கட்டுதிட்டக் கவனத்தோடு
காதலித்தால் என்னை நீங்கள்,
கால் செருப்பாய் சேவை செய்வேன்;
குழந்தை போல் சுகமளிப்பேன்;
கவனமின்றி , போட்டு விட்டால்
பிரளயத் தீ படமெடுப்பேன்;
இயற்கை என்னும் எங்கள் வம்சம்
எளிதென்று எண்ண வேண்டாம்,
நேசம் வேண்டாம், பகைமை வேண்டாம்,
கவனித்தால் சேவை செய்வோம்!
- ந.பிச்சமூர்த்தி
No comments:
Post a Comment