
கவிதைகளை
கைது செய்வதாக
ஒருவன் சொல்லி விட்டுப்
போகிறான் !
கவிதைகள் ஓடிப் போய்
ஒளிந்து கொள்கின்றன !
காதல் கவிதைகள்
கெளரவக் கொலைக்காக
பயந்து நடுங்குகின்றன !
ஞானக் கவிதைகள்
தத்துவமாய்ப் பேசித்
தளும்புகின்றன !
பொதுவுடைமைக் கவிதைகள்
தேடி யலைகிறது
கைது செய்பவனை !
தகவல் வீசிச் சென்றவன்
விடியலில் புரளி யென்று
சொல்லிவிட்டுப் போகிறான் !
பதுங்கியிருந்த கவிதைகள்
பாசாங்கென்று சொல்லிவிட்டு
புறணிப் பாடக் கிளம்பி விட்டன !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment