Saturday, 29 July 2017

நான் இரசித்த கவிதைகள் - 9



சுவாசம்

Image may contain: 1 person, smiling, closeup

எப்பொழுதும்
எனது எல்லாக் காரியங்களும்
நான் இல்லாத போதே
நிகழ்ந்துவிடுகின்றன

ஒவ்வொரு முறையும்
எதையும்
ஸ்பரிசித்து உணர்வதற்குள்
அவை நிகழ்ந்து முடிகின்றன

நான்
முயன்றுதான் பார்க்கிறேன்
என்றாவது
எதுவாயினும்
நிகழ்வதற்கு முன்பே
நான் அதைத் தொடுவதற்கு

ஆயினும்
என் முயற்சிகளைத் தோற்கடித்து
எனக்காக நிகழும் அவை
நானில்லாமலேயே நடந்துவிடுகின்றன

மலர்கள்
மனிதர்களுடனான
உலகம்
மிகப் பெரியது
என்னை விட

நான் அனுமதிக்கத்தான் வேண்டுமா
என் சுவாசம்
நானின்றி நிகழ்வதை ?

கவிதாயினி சல்மா

No comments:

Post a Comment

Popular Posts