Tuesday, 25 July 2017

இரத்த நக்கிகள்


No automatic alt text available.

இரத்தச் சேற்றினை 
உழுது கொண்டிருக்கிறது 
காவல் கலப்பைகள் , 

தழைக்கும் பயிர்கள் 
தரிசு நிலத்தில் புதைந்து கொண்டு , 

ரோஜாக்களின் தேசத்தில் 
வண்ணங்களைக் கூட்ட 
முஸ்லிம்களின் உதிரங்கள் ...

ஓநாய்கள் 
ஓரணியில் நின்று கொண்டிருக்க
காந்தி மண்ணில் கலவரம் 
மீண்டும் காட்சியாகிறது ,

தூங்குகின்றன 
ஊடக உறுமல்கள்....
இலங்கையின் 
இன்னொரு படிமானமா இது?

இரத்த நக்கிகளே 
நீங்கள் புறாக்களின் வடிவினில் 
கண்ணீர் வடித்தாலும் 
உங்கள் மூச்சுக் காற்றினில் வீசுகிறது 
உதிரத்தின் நாற்றம் ,

இரத்தப் பூமியில் 
ரோஜாக்களென்றும் விளைவதில்லை ... 

பார்த்துப் போங்கள் 
புதைந்து கிடக்கும் உடல்கள் 
மீண்டும்  உயிர்த்தெழப் போகின்றன 

-மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts