வனதேவதையின் பாட்டோசை
சில்லென்று சிலிர்த்து வியாபிக்க...
சிறகுலர்த்தும் மறவைகளின்
சிறாக் சப்தம் மெருகூட்டி,
மென்காற்றுத் தட்டிய சிலிர்ப்பில்
சிகையசைக்கும் மரங்களின் இலைகள்
மகிழிசைக்க,
துல்லிய கதிரொளித் தூவலாய்ச் சிதறி விழ,
துரத்தலின் நாடகம் இரைக்காய் அரங்கேற,
பறத்தலும் விரட்டலும் பகலெனக் கழிவுற,
மிரட்டல்களடங்கி மீள் துயில் தொடங்க
இருட்டிலும் தாலாட்டும் இயற்கையின் பாடல்
எதுகையும்
மோனையும் இல்லாமல் இசைப் பரப்ப..
உறங்காத ஓடையில் ஒன்றிடும் அருவியாய்
கவிதைக்குள் சற்றே கண்ணயர்கிறேன் கண்ணே
நகரத்தின் வாழ்க்கையாம் நரகத்தில்
எத்தனை நாள்
என் கவிதையை வீணாய்ப் புதைப்பது...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment