வார்த்தைகள்
நொண்டியடித்தன,
கண்கள்
கண்ணீர் சிந்தின,
ஆட்டம் முடிந்தது,
வாருங்கள்
நாம்,
அடுத்த ஆட்டத்தைத்
தொடங்குவோம்...!
***
கடவுள் உண்டியலுக்கு
கருப்பு மாடன்தான் காவலாளி !
காவல் காக்கும் நேரம்
கடவுளிடம் அவன் கேட்கலாம் ,
கருவறைக்குள் என்னை
எப்போது அனுமதிப்பாயென்று !
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment